உள் நாட்டு தேசபக்த குழுக்களிடையே ஒற்றுமை இல்லாததே அன்றும், இன்றுமாக ஆப்கானில் தொடர்ந்து அந்நியத் தலையீடுகளுக்கு வழிவகுக்கிறது…! பல்லாண்டு காலம் தனக்கு அரசியல் கூட்டாளியாக இருந்த தாலிபான்களை, நெஞ்சார்ந்த நண்பனாகப் பாவித்த தலிபான்களை அமெரிக்கா 2001ம் ஆண்டு குண்டுவீசி தாக்கி படையெடுத்து, ஆப்கனை ஆக்கிரமித்து,  தாலிபன் ஆட்சியை ஏன் அகற்றியது? மதரசா பள்ளியில் பயின்ற மாணவர்களாக  அரசியல் பயணத்தை துவக்கிய தலிபான்கள் கறுப்பு வண்ணம் தரித்தவர்களாக, “ஷரியா ” சட்டத்தை அமுலாக்குவதில் கடுமையானவர்களாக, பெண்களை அடக்கி ஒடுக்குவதில் உச்சமாக விளங்கினார்கள். ஆனால்,அவர்கள் ஆப்கான் மண்ணைத் தீவிரமாக ...

வல்லரசுகளின் கல்லறை ஆப்கானிஸ்தான் (பகுதி 1) வரலாறு நெடுக அடுத்தடுத்து ஆக்கிரமிப்பாளர்களை வரவேற்று, அவர்களுக்கு கல்லறை எழுப்பி வருகிறது ஆப்கானிஸ்தான்! எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பின்லேடனையும், தலிபான்களையும் வளர்த்த அமெரிக்கா.., தான் விரித்த வலையில் தானே சிக்குண்ட கதையை பார்ப்போமா..? அமெரிக்க படைகளின் கடைசி விமானம் ,தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஆப்கானிஸ்தான் மண்ணை விட்டு கிளம்பியவுடன் தலிபான் படையினர் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  “இன்று ஆப்கான் நாடு அந்நியர் அனைவரையும் வெளியேற்றி சுதந்திர காற்றை சுவைக்கிறது”  என்று கொண்டாடத் துவங்கினர். ...

இருபதாண்டு கால அந்நியர் ஆக்கிரமிப்பு! ஆட்சியாளர்களின் அதி மோசமான முறைகேடுகள்! அமெரிக்க ஆதரவுள்ள படித்த மேல்தட்டுவர்க்கத்தின் ஆடம்பரமான, ஊதாரித்தனமான வாழ்க்கை.. போன்றவற்றை பார்த்து வெறுத்துப் போயிருந்த மக்களில் சிலர், ‘கொள்கை வெறியுடன் மலைமுடுக்குகளில் மறைந்திருந்து உயிர் கொடுத்து போராடிய தாலிபான்கள் வந்தால் வரட்டுமே’ என்று நினைத்தது உண்மைதான்! ஆனால், தற்போது பெண்களை ஒடுக்க துடித்த தாலிபான்களை எதிர்க்க துணிந்துவிட்டனர் பெண்கள்! சட்டம் ஒழுங்கு எதுவுமில்லை;  கேள்வி கேட்க முடியாது; தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! யார் உயிருக்கும் உத்திரவாதமில்லை. யார் வீட்டுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து சோதனை ...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறித்து பல உலக நாடுகளும், ஐ.நா சபையும் அச்சம் தெரிவித்து வருகின்றன. ”அங்கு தற்போது மக்கள் சந்திக்கும் பேராபத்து உலக நாடுகளுக்கே அசிங்கம், பெரும் தோல்வி” என்று ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார். ”அமெரிக்கா ஆப்கான் மக்களை அந்தோவென கைவிட்டுவிட்டது. இது மாபெரும் துரோகம்” என இங்குள்ள இந்துத்துவ ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள்! ”இனி’ ஆப்கானில் கொலைகள் நடந்தேறும்,கொடூரங்கள் நடந்தேறும்” என பலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள்! இப்படியான பார்வைகள் சில யதார்த்தங்களை உணராமல் அல்லது உள் வாங்க விரும்பாமல் வெளிப்படுகின்றன ...

ஆப்கானிஸ்தான் எப்போதுமே ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிராகவே தொடர்கிறது. வெறும் 3.9 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. தன்னை ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷை 1919ல் வீழ்த்தியது! தன்னை அடிமைபடுத்த முயன்ற ரஷ்யாவை 1996ல் தோற்கடித்து பின்வாங்க வைத்தது. தற்போது அமெரிக்காவை பின்வாங்க வைத்துள்ளது. எத்தனை உயிர் பலிகளுக்கிடையிலும் அயராமல் போராடி அன்னியரை வெளியேற்றிய தாலிபான்களை சீனாவும், பாகிஸ்தானும் சினேகம் பாராட்டுவது எதனால்..? தாலிபான்கள் தலை தூக்குவது இந்தியாவிற்கு ஆபத்தா..? உலகின் மிகத் தொன்மையான கலாச்சாரத்திற்கு பேர் போன நாடு. இஸ்லாமிய தேசமாவதற்கு முன்பு ...