தமிழ் நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? எளியோரிடம் இரக்கம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த எடுக்கப்பட்ட ஒரு சினிமா படத்தை முன்வைத்து பலவித கலவரச் சூழல்கள் உருவாக்கப்படுவதும், ”உதைப்பேன், கையை வெட்டுவேன்” என்ற வன்முறை பேச்சுகள் அரங்கேறுவதும், தியேட்டர்களில் படம் பாதியில் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதும், சூரியாவின் பேனர்கள் கிழித்து எரிக்கப்படுவதும்… நடந்து கொண்டே இருக்கின்றன! இதை இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறது அரசாங்கம்? வன்முறை வளர்ந்து நடக்கக் கூடாத ஒன்று நடந்த பிறகு தான் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா? ...

பழங்குடி மக்கள் அதிகார மையத்தால் அனுபவிக்கும் சொல்லப்படாத வலிகளை சொல்லும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் ஒரு புறம் மக்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில், மற்றொரு புறம் மதவாத, சாதிய அரசியல் செய்து வருபவர்களின் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த விமர்சனங்களுக்கான பதில்கள் படத்திற்குள்ளேயே இருக்கிறது என்ற வகையில் அமைதியாக கடந்து சென்றார் சூர்யா! ஆனால், அன்புமணி ராமதாஸ் மிக சூடாகி சூர்யாவிற்கு சில கேள்விகளை பொதுவெளியில் எழுப்பி ‘கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்’ என்றார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் ...

எம்.ஆதித்யா, பனைமரத்துப்பட்டி, சேலம் ”ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இடைத்தரகர் சூசேன்குப்தாவிற்கு ரூ65 கோடி தரப்பட்டுள்ளது பற்றி ராகுல் பதில் சொல்ல வேண்டும்” என்கிறதே பாஜக? இதைக் கண்டுபிடிக்க ஏழு ஆண்டுகளா..? இதைத் தெரிந்து கொள்ளாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டு 36 விமானங்கள் வாங்கபட்டதா? இந்த அளவுக்குத் தான் நிர்வாகத் திறமையா..? தவறு நடந்திருக்கிறதென்றால், தண்டிக்க வேண்டியவர்களே நீங்கள் தானே? சம்பந்தப்பட்டவர்களை எப்போது உள்ளே தள்ளப் போகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! விவகாரத்தை திசை திருப்பாமல் பதில் சொல்லட்டும். காங்கிரஸ் ஆட்சியில் ...

சிபி, பேரளையூர், கடலூர் ”இந்து விரோதி” என்ற பாசகவின் விமர்சனத்திற்கு ஸ்டாலின், ‘தன் கட்சியில் பெரும்பான்மை இந்துகள் தான்’ என்றார். மம்தா, ”மதத்தை வைத்துப் பிரிவினை முடியாது” என்கிறார். இது குறித்து.? திமுக இந்துக்களை தாஜா செய்யக் கூடிய கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்றாலும், அது ஒரு போதும், சிறுபான்மையினரை தாக்கும் கட்சியாக மாறாது. ”மதத்தை வைத்து பிரிவினை முடியாது” என்ற மம்தாவே கூட மேற்குவங்கத்தில் ராமரை முன்னிறுத்திய பாஜகவிற்கு மாற்றாக துர்க்கையை அடையாளப்படுத்தும் அரசியலைk கையில் எடுத்தார் என்பதே யாதார்த்தம்! மருதமலை மகேஷ், ...

உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டாலும் ஆவணப்படமாகவோ, மிகைப்படுத்தியோ, பிரச்சார தொனியோ இல்லாமல்  திரைப்படம் முழுவதும் ஒரு திரில்லர் படம் பார்ப்பது போன்ற  உணர்வு நமக்குள் எழும் வண்ணம் காட்சி அமைப்புகள் உள்ளன! சொல்லப்படாத பழங்குடியினர் வாழ்க்கை போராட்டத்தை, உலுக்கி எடுக்கும் வகையில், மிக உயிர்ப்புடன், உலகத் தரத்தில் விவரிக்கிறது ஜெய்பீம்! உண்மையில் இந்த திரைப்படம் சினிமாத் தனம் இல்லாத ஒரு சினிமா என்று தான் சொல்ல வேண்டும். சிறிது கூட தொய்வு இல்லாமல் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை படத்தை நகர்த்தியிருக்கும் பாங்கு மிக ...

சூரரை போற்று படத்தின் கதை, அது உயிரோட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் விதம், சூர்யா  ஊர்வசி உள்ளிட்ட அனைவரின் அபார நடிப்புத் திறன், அற்புதமான இயக்கம்,துடிப்பான இசை, காட்சிபடுத்தலில் உள்ள நுட்பங்கள் ஆகியவை அனைத்து ரசிகர்களையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தப் படம் பேசியும்,பேசாமலும் உணர்த்தும் அரசியல் அபாரமானது. இதுவரை தமிழ் சினிமா பேசத் தயங்கியதும் கூட! ஆகவே, இந்தப் படம்  ஒரு தரப்பை ரொம்பவே கலவரப்படுத்தியுள்ளது! ஆனால்,அமேசான் மூலம் பல கோடி பார்வையாளர்களை சென்றடைந்துவிட்டது! இது வரை எந்த தமிழ்படத்திற்கும் அமேசானில் கிடைக்காத பார்வையாளர்கள் இந்தப் படத்திற்கு ...