எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டாக உள்ளது, அதிமுக! பகைமையும், மோதல்களும் பனிப் போர்வை போர்த்திக் கொண்டுள்ளன! கையில் இருக்கும் கத்தியை முதுகுக்குப் பின் மறைத்துக் கொண்டே, மற்றொரு கையால் இருவரும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்! ‘’இவர்கள் உண்மையாகவே மோதமாட்டார்களா..? இதைச் சாக்காக வைத்து அதிமுகவிற்கு தலைமை தாங்கும் காலம் கனியாதா?’’ என்ற சசிகலாவின் எதிர்பார்பு நிறைவேறுமா..? ‘’இ.பி.எஸ் பலம் பெற்று வருகிறார்! அவர் ஒ.பி.எஸ் ஆட்களை ஓரம் கட்டுகிறார்.’’ ‘’ஒ.பி.எஸ்சின் அதிகாரம் குறைந்து கொண்டே போகிறது! ஒ.பிஎஸ்சையே காலப் போக்கில் காலியாக்கிவிடுவார் பழனிச்சாமி!’’ ‘’ஐயோ..பாவம் ...

அதிமுகவிற்குள் நுழைவதற்கு பாஜகவின் மூலம் பல்வேறு அழுத்தங்களை செய்து பார்த்து அது தோல்வி அடைந்த நிலையில் அமமுகவை கூட்டணியாகவாவது அதிமுக கூட்டணியில் அங்கீகரிக்க வேண்டும் என சசிகலாவும், டி.டி,வி.தினகரனும் பாஜகவிடம் மன்றாடியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் தந்து வருகிறது பாஜக தலைமை. அமித்ஷா மீண்டும்,மீண்டும் எடப்பாடிக்கும்,பன்னீருக்கும் இந்த அழுத்தத்தை தொடர்ந்து தந்து வருவது அதிமுக வட்டாரத்தில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசிய போது,  ”பாஜகவின் அதீத தலையீடு காரணமாக கட்சியின் மேல் ...

அதிகாரம்,செல்வம்..ஆகியவற்றை மையபடுத்தி செயல்படும் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதற்கும், வேறுபட்டு பிரிவதற்கும் அதுவே காரணமாகிவிடுகிறது! இ.பி.எஸ்ஸையும்-ஒபிஎஸ்ஸையும் ஒன்றுபடுத்தி இருப்பதற்கும் அதுவே காரணம்! சசிகலாவிடம் இவர்கள் ஒன்றுபடமுடியாமல் போவதற்கும் அதுவே காரணம்! எந்த ஒரு மனிதனுக்கும் எதிரி வெளியில் இல்லை! தனக்குள் பேராசை, சுயநலம் என்ற எதிரிகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், வெளியில் இருக்கும் எதிரியை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும்! சசிகலாவை இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கமுடியாமல் தடுமாறிய போது தான் தெரிய வந்தது இவர்கள் ஆட்சி என்றால், அதிகாரபூர்வமாக பொதுச் சொத்தை அனுபவிப்பது என்பதற்கு மேலாக ...

சசிகலா வருகையை வேறெவரைக் காட்டிலும் ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்தி வருகின்றன! சசிகலாவைக் குறித்த பிரம்மாண்டமான மாயைகள் கட்டமைக்கப்படுகின்றன! நாளை அவர் வருகையை நேரடி ஒளிபரப்பாக்க தொலைகாட்சி ஊடகங்கள் பல மும்முரமாக திட்டமிட்டு வருகின்றன! இன்றைய காலகட்டத்தில் எந்த மோசமான அரசியல்வாதிகளைக் காட்டிலும், ஊடகங்களே மிக ஆபத்தானவையாக உள்ளன! சசிகலா இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ தியாகம் செய்தோ,போராட்டம் நடத்தியோ சிறை சென்று திரும்பவில்லை! எனினும், அவரை மிகைப்படுத்தி சதா சர்வகாலமும் ஊடகங்கள் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் உள்ளன! நாட்டிற்கு தேவையான முக்கியமானவர்களை கவனப்படுத்துவதை விடவும் ...

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு இறுக்கம் அதிமுகவிற்குள் நிலவுகிறது! பன்னீரின் வெளிப்படைத் தன்மை இல்லாத மறைமுகமான சசிகலா ஆதரவு போக்குகள் ஒருபுறம், சசிகலா தமிழகம் வந்தால் கட்சிக்குள் என்ன நடக்கப் போகிறது..யார் உறுதியுடன், கட்டுக் கோப்புடன் நிற்பார்கள் அல்லது போவார்கள் என்ற குழப்பமான சூழல்! எடப்பாடிக்கா? சசிகலாவிற்கா? யாருக்கு ஆதரவு தருவதன் மூலம் தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த முடியும் என்ற கணக்கு அதன் மேலிடத்திற்கு…? நான்கு வருடம் ஆட்சியை கவிழாமல் காப்பாற்றிவிட்டார் பழனிச்சாமி! ஒரு பக்கம் ஒ.பி.எஸ்சையும், மறுபக்கம் மத்திய ஆட்சியாளர்களையும், மற்றொரு பக்கம் ...

சசிகலாவின் வருகை எடப்பாடியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது! சசிகலா ஒன்றும் மக்கள் தலைவியல்ல! தியாகியல்ல, நிர்வாகியுமல்ல! ஆயினும் நான்காண்டுகள் குற்ற வழக்கில் சிறையில் இருந்து வரும் ஒருவரால் தமிழக அரசியல் அதகளப்படவுள்ளது! அதிமுகவின் ரிங்மாஸ்டராக அறியப்பட்ட சசிகலா, அங்கீகரிக்க மாட்டார் எடப்பாடியின் முதல்வர் அதிகார மோகத்தை! இதனால் தற்போது பதற்றத்தோடு டெல்லி சென்று காய் நகர்த்துகிறார் எடப்பாடி! அ.திமுகவினரை அடிமைகளாகவும், அதிகாரப் பற்றுள்ள சுயநலவாதிகளாகவும் மட்டுமே எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் வளர்த்து ஆளாக்கியுள்ளனர் என்ற வகையில் இன்று சசிகலாவை முழுவீச்சில் எதிர்பதற்கான ஆற்றல் எவருக்காவது இருக்குமா என்பது கேள்விக்குறியே! ...

ஐயோ பாவம்! ஆனாலும் துக்ளக்கிற்கு இப்படியொரு அவலம் நேர்ந்திருக்க வேண்டியதில்லை! துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியராகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டு, வலம் வரும் குருமூர்த்தியின் இயலாமைகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்டன…! தமிழகத்தில் சோவின் வெற்றிடத்தை நிரப்ப, குருமூர்த்தி செய்யும் பிரயத்தனங்கள் கோமாளித்தனத்தின் உச்சமாகும்! சோவைப் பொறுத்தவரை அவர் தமிழக பாஜகவின் நம்பத்தகுந்த சகாவாகத் தன்னை வைத்திருந்தார்! ஆனால், குருமூர்த்தியோ தன் பக்குவமற்ற உளறல் பேச்சுக்களால் தமிழக பாஜகவிற்கு அனுகூல சத்துருவாக மாறி நிற்கிறார் என்பது தான் துக்ளக்கின் சமீபத்திய ஆண்டுவிழாவில் அவரது பேச்சுகளில் ...

இன்றைய நிலவரப்படி சசிகலா ஜனவரி 27 விடுதலையாவது உறுதி என நம்பப்படுகிறது. ஆட்சி, அதிமுக வசம் இருந்தாலும், அது கேப்டன் இல்லாத கப்பலாகவே அதிகார மிதப்பில் மிதந்து கொண்டுள்ளது! ஆட்சிக்கு தலைமை என்பதை யார் வேண்டுமானாலும் தாங்கலாம்! ஏனெனில், வழி நடத்தி செல்ல அரசு அதிகாரிகள் உள்ளிட்ட கட்டமைப்பு உள்ளது. ஆனால், கட்சித் தலைமை என்பது ஒரு கலையாகும்! அதற்கு அசாத்தியமான தலைமைப் பண்பு வேண்டும்! தலைவன் நினைப்பதை செயல்படுத்த அடிமட்டத் தொண்டன் அவர் கட்டளைக்கு காத்திருக்கும் மன நிலையை ஏற்படுத்த வேண்டும்! தலைவனின் ...