ஒவ்வொரு மாதமும் அறத்திற்கான சந்தா கேட்பதை சமீப காலமாக தவிர்த்து வருகிறேன்! பொது நலன் சார்ந்த பார்வையுடன், சமரசமின்றி வந்து கொண்டிருக்கும் இதழுக்கு தாங்களாகவே முன்வந்து வாசகர்கள் தார்மீக பங்களிக்கட்டுமே..’’ என்று தான் அமைதி காத்திருந்தேன்! ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சிலர் தான் தொடர் பங்களிப்பு செய்கின்றனர்! ‘இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்! கமிட்மெண்டான வாசகர்கள் மிகச் சிலர் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமே இன்றி சந்தா அனுப்புகின்றனர்! நினைவுபடுத்தித் தான் சந்தா ...

வணக்கம் நண்பர்களே, அறம் சிறு தீப்பொறி தான்! படிப்போர் சிந்தையிலும் அந்த தீப்பொறி பற்றிக் கொள்வதால் அதன் அளவுக்கு அநீதிகளை சுட்டெரிக்கவே செய்கிறது. அதனால், கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் அரங்கில் அதிர்வுகளையும், சமூக தளத்தில் சலசலப்புகளையும் தன் போக்கில் ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. வேறெப்போதும் இல்லாத அளவுக்கு நமது அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் அடிமைத் தனமும், பாசாங்குத் தனமும் மேலோங்கி இருக்கிறது! இந்த சமூகம் தனக்குத் தானே விலங்கிட்டுக் கொண்டது. அதுவே, அரசியலிலும் பிரதிபலிக்கிறது. அதைத் தான் அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும் ...

அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி அடுத்த மாதத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் நிகழ்பனவற்றை உள்ளதை உள்ளபடி உண்மைத் தேடலுடன் பகிர்ந்து வருகிறோம்! உண்மை தான் முக்கியம் , அதில் சமரசமோ, சார்புத் தன்மையோ தலையிட அனுமதிப்பதில்லை. இன்றைய பெரு நிறுவனங்களின் ஊடகங்கள் அதிகார மையங்களை சார்ந்து இயங்குவதால் தொடர்ந்து பற்பல மாயைகளை கட்டமைத்து உண்மைகளை உணரவிடாமல் மக்களை குழப்பி ...

வாசகர் ஆதரவால் மட்டுமே செயல்படக் கூடிய ஒரு இணைய இதழாக அறம் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது! உண்மைக்கான தேடல் கொண்ட வாசகர் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில் நமது சமரசமற்ற விமர்சனங்களால் தவிர்க்கவியலாமல் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகப்பட்டுவிடுகிறது, நாம் விரும்பாமலே! எனினும் அச்சம் காரணமாகவோ, தயவு காரணமாகவோ சமூக தளத்தில் உண்மை ஊமையாகிவிடும் நேரத்தில் யதார்தங்களை பேசாமல் நம்மால் அமைதி காக்க முடியவில்லை. அறம் தன் சமரசமற்ற விமர்சனங்களால் அரசியல், சமூக தளங்களில் தொடர்ந்து அதிர்வுகளை உருவாக்கி வருகிறது என்றாலும், பொருளாதார ...

ரஜினிகாந்த் நிம்மதியா, ஆரோக்கியமாக வாழட்டும்! அரசியலில் ஈடுபட உடல் இடம் தரவில்லை என்பது உண்மை என்றாலும், அவரது உள்ளமும் அதற்கு இடம் தரவில்லை என்ற உண்மையை அவர் நீண்ட நெடுங்காலமாக மறைத்து வந்தார்! இப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து தன்னைவிடுவித்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்! இதை பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட போதே அறிவித்திருக்கலாம்! அல்லது இரண்டாவது கிட்னி டேமேஜ் ஆகி மாற்று பொருத்தபட்ட போதாவது அறிவித்திருக்கலாம்! குழப்பம், அதிகார மயக்கம், பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் ...

விவசாயப் போராட்டத்திற்கான முழுமுதற் காரணிகள் அம்பானியும், அதானியும் தான்! அவர்களால் வடிவமைக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் தாம் பாராளுமன்றத்தில் அராஜகமாக பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது! அம்பானிக்கும், அதானிக்கும் சேவை செய்வதற்காகவே பாஜக அரசு தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது தான் என்றாலும், இந்த விவசாய திட்ட அமலாக்கத்தின் மூலம் அது சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுவிட்டது! அது தான் விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது, மாநில அரசாங்கங்களின் A.P.M.C என்ற விவசாய உற்பத்தி பொருட்களின் விலையை ...

உலகத்தின் பழமையான தொழில் விவசாயம். தற்போது விவசாயிகள் புதுதில்லியை முற்றுகை இட்டு, தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்; ஆனால் அரசு வழக்கறிஞர் ’முடியாது’ என்கிறார். உச்சநீதிமன்றம் இந்த சட்டங்களுக்கு தடை விதிக்கவில்லை. அதே நேரம் போராட்டத்திற்கு தடை விதிக்கவும் இல்லை. ஏனெனில் அவர்களால் ...

‘’இந்தாங்க..ரஜினிகாந்த் வந்தப்ப கொடுத்துட்டு போனாரு’’ ன்னு என் கையில ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்தார் துக்ளக் தலைமை துணை ஆசிரியர் மதலை! அதை வாங்கி பார்த்தப்ப சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த ’பாபா’படப் பாடல்களின் ஆடியோ கேசட் என புரிய வந்தது! ‘’ரஜினிகாந்த் குடுத்தாரா..?’’ என்றேன் புருவத்தை உயர்த்தியபடி! ‘’ஆமா,அவர் தான் நம்ம சாரை பார்க்க வந்த போது இங்கே நம்ம இடத்திற்கும் வந்து ஒவ்வொருவராக தேடி வந்து இதை கொடுத்துட்டு, இன்னும் யாராவது விடுபட்டு இருக்காங்களான்னு கேட்டு, உங்களுக்கும் சேர்த்து கொடுத்துட்டு போனாரு..’’ வாங்கி ...

ரஜினி ஆஸ்பீடலைஸ்டு ஆனதற்கு அவரை அரசியலுக்கு வருமாறு நிர்பந்தித்து வருவது தான் காரணமாக இருக்கலாம் என நான் யூகிக்கிறேன்! டிசம்பர் 31 நெருங்க, நெருங்க அவரை பதற்றம் தொற்றத் தொடங்கி, அது அவரை மன உலைச்சல், ரத்த அழுத்தம் ஆகியவற்றில் தள்ளிவிட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்! கொரானா காலகட்டம் முழுவதும் தன்னை தனிமைப்படுத்தி தற்காத்துக் கொண்டவர் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார் என்றால், அது சினிமா மீது அவருக்கு இருக்கும் அளவற்ற பற்றைத் தான் உணர்த்துகிறது! ஏனெனில், அவர் சினிமா ஒன்றைத் தான் உயிர்மூச்சாக ...

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுள் காங்கிரசை நாளும்,பொழுதும் அணு அணுவாகப் பிளந்து விழுங்கிவருகிறது பாஜக! இரண்டு நாள் பயணமாக தற்போது கல்கத்தாவில் கால்பதித்துள்ளார் அமித்ஷா! திசைமாறி பயணிக்க தயாராகவுள்ள திரிணமுள் தலைவர்களை தீயாய் தேடி எடுத்து அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் செயல்திட்டம் படுவேகம் பெற்றுவிட்டது! திரிணமுள்ளின் பலமும்,பலவீனமும் மம்தாதான்! மம்தாவின் செயல்பாடுகள் பாஜகவை எப்படி பலம்பெற வைத்துக் கொண்டுள்ளன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை! மதவாத அரசியலின் மாபாதகத்தை இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது சந்தித்த மண் தான் வங்கம்! ரத்தகறை படிந்த அந்த மதவாத ...