தீஸ்தா! அச்சமில்லாதவர்! மோடியை அஞ்ச வைத்துக் கொண்டிருக்கும் மனித உரிமைப் போராளி! குஜராத் படுகொலையையும், அதில் மோடியின் தொடர்பையும் உலகறியச் செய்தவர். ஜெயமோகனின் அறம் மகத்தான மானுட நேயப் படைப்பு! இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உண்மைக் கதையும் நம் உள்ளத்தை உலுக்குபவை. குஜராத் கலவர்ம் மற்றும் படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு இடையறாத சட்ட போராட்டதை நடத்திய தீஸ்தாவை தற்போது ஒன்றிய அரசு கைது செய்துள்ள நிலையில் இந்த நூல் முக்கியத்துவமாகிறது. பத்திரிகையாளரான தீஸ்தா செதல்வாட் எழுதிய  ‘ தீஸ்தா செதல்வாட் நினைவோடை – அரசமைப்புச் ...

அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி அடுத்த மாதத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் நிகழ்பனவற்றை உள்ளதை உள்ளபடி உண்மைத் தேடலுடன் பகிர்ந்து வருகிறோம்! உண்மை தான் முக்கியம் , அதில் சமரசமோ, சார்புத் தன்மையோ தலையிட அனுமதிப்பதில்லை. இன்றைய பெரு நிறுவனங்களின் ஊடகங்கள் அதிகார மையங்களை சார்ந்து இயங்குவதால் தொடர்ந்து பற்பல மாயைகளை கட்டமைத்து உண்மைகளை உணரவிடாமல் மக்களை குழப்பி ...

வாசகர் ஆதரவால் மட்டுமே செயல்படக் கூடிய ஒரு இணைய இதழாக அறம் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது! உண்மைக்கான தேடல் கொண்ட வாசகர் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில் நமது சமரசமற்ற விமர்சனங்களால் தவிர்க்கவியலாமல் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகப்பட்டுவிடுகிறது, நாம் விரும்பாமலே! எனினும் அச்சம் காரணமாகவோ, தயவு காரணமாகவோ சமூக தளத்தில் உண்மை ஊமையாகிவிடும் நேரத்தில் யதார்தங்களை பேசாமல் நம்மால் அமைதி காக்க முடியவில்லை. அறம் தன் சமரசமற்ற விமர்சனங்களால் அரசியல், சமூக தளங்களில் தொடர்ந்து அதிர்வுகளை உருவாக்கி வருகிறது என்றாலும், பொருளாதார ...

அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! கொரோனா காலகட்டம், அந்த காலகட்டத்தில் சமூகம் சந்தித்த நெருக்கடிகள்,பொருளாதாரச் சவால்கள் தொடங்கி அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய அரசியல் போக்குகள், சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியது போலவே இந்த ஆட்சியாளர்களின் நல்லவை, கெட்டவைகளையும் பாரபட்சமின்றி விமர்சித்து வருகிறோம்.மத்திய பாஜக ஆட்சியின் நிர்வாக போக்குகளையும், சர்வதேசிய விவகாரங்களையும் உடனுக்குடன் ஆய்வு செய்து தந்து கொண்டுள்ளோம். ...

அன்பு நண்பர்களே, தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! அஞ்சா நெஞ்சுரத்துடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையை பற்றிக் கொண்டு பயணிக்கிறது! நாம் விளம்பரத்தை ஏற்பதில்லை என்பதில் இன்றளவும் உறுதிப்பாட்டுடன் இயங்கி வருகிறோம். தன் வாசகர் தரும் சந்தாவால் மட்டுமே இயங்க வேண்டும் என்பது மட்டுமல்ல, வாசகர் அல்லாத வசதி படைத்த எவரிடமும் நாம் நிதி உதவிகள் கேட்பதில்லை. எந்த ஒரு அரசியல் இயக்கத்தையும் ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொள்ளாமல் பிரச்சினை சார்ந்து, அதில் மக்கள் ...

அறத்திற்கு நாளுக்கு நாள் கூடுதல் வாசகர்கள் வந்து கொண்டே உள்ளனர்! விளம்பரமோ, வியாபார உக்தியோ இல்லாமல் வாசகர்கள் வாயிலாக அறம் தானாகத் தன்னை விரிவுபடுத்திக் கொள்கிறது. ஆக, அறம் சார்ந்த பார்வை பலரையும் ஈர்க்கிறது என நம்பிக்கை கொள்கிறேன்! பொழுது போக்கவோ, நேரத்தை விரயமாக்கவோ நினைக்கும் வாசகர்கள் அறம் வாசிப்பதில்லை. சமூக அக்கறையும், மானுட நேயமும் தான் நம்மை பிணைத்துள்ளன! சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேள்வி – பதில் பகுதி மிகுந்த வரவேற்பை பெற்று வருவது நான் எதிர்பார்க்காததாகும். உண்மையில் மிகுந்த தயக்கத்தின் பிறகே இந்தப் ...

அன்பு நண்பர்களே, கடந்த சில மாதங்களாக கேட்பதையே விட்டுவிட்டேன். பொது நலன் சார்ந்த பார்வையுடன் சமரசமின்றி வந்து கொண்டிருக்கும் இதழுக்கு தாங்களாகவே முன்வந்து தார்மீக பங்களிக்கட்டுமே..’’ என்று தான் அமைதி காத்தேன்! ஆனால், துர் அதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சிலர் தான் தொடர் பங்களிப்பு செய்கின்றனர்! ‘யாராவது ஒரு சிலர் தந்துவிடுவார்கள்! இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்! இன்னும் எவ்வளவோ பல அம்சங்களை இதழில் கொண்டு வர நினைக்கின்றேன். பொருளாதார சிக்கல்கள் இந்த அளவுக்கு ...

வெற்றிச் செல்வி, மனநல ஆலோசகர், சென்னை. தமிழகத்தில் ,தமிழ் தேசியம் ஆட்சி செய்யும் காலம் வருமா ஐயா.? தமிழகத்தில் முதன்முதலாக தமிழர் கழகம் உருவாக்கியவர் தமிழ்தாத்தா கி.ஆ.பெ.விசுவநாதம்! காங்கிரஸிலிருந்த பெரியாரை நீதிக்கட்சிக்கு அழைத்து வந்த கி.ஆ.பெ, இருபதாண்டுகள் பெரியாரோடு இணைந்து களம் கண்டவர்! பெரியாரும், அண்ணாவும் திராவிடர் கழகம் தொடங்கியதால் கருத்து மாறுபட்டு தமிழர் கழகம் உருவாக்கினார்! மாபெரும் தமிழ்ப் போராளியும்,முத்தமிழ் அறிஞருமான கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழர் கழகம், இந்திய தேசியத்திற்கு அனுசரணையான தமிழ் தேசியத்தை பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகம்..ஆகியவற்றால் தமிழ்நாடும், ...

அன்பு நண்பர்களே, நமது வாசக நண்பர்கள் சிலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்றை நடைமுறைப் படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன்! ஒவ்வொரு நாளும் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன! அவற்றில் ஒன்று அல்லது இரண்டு விவகாரத்தை மட்டுமே விளக்கி கட்டுரை எழுதுகிறீர்கள். மற்ற பல விஷயங்களில் உங்கள் நிலைபாடு என்ன என்று தெரிவதில்லை! ஆகவே கேள்வி,பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். என்பது சில வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்! சில விஷயங்களை நேரமின்மை காரணமாக நான் எழுத வாய்ப்பில்லாமல் கடக்கும் போது ஒரு சிலர் வேண்டுமென்றே ...

அறம் இணைய இதழ் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது! இரண்டாம் ஆண்டில் நடை போட தொடங்கியுள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் இந்த ஊடகப் பயணம் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன். சமூகத்தின் பல்வேறு வெளிப்பாட்டுத் தளங்களாம் அரசியல் முதல் ஆன்மீகம் வரை, வயல் வெளி முதல் வணிகத் தளம் வரை, போராட்டக் களம் முதல் பொழுதுபோக்குத் துறை வரை தொடர்பான உண்மைகளை ஓங்கிச் சொல்லுவது ஊடகத்தின் ஒப்பிலாப் பணி. இந்த கருத்துப் பணியை கச்சிதமாகச் செய்கிறது அறம். அத்துமீறுகிற அதிகார வர்க்கத்திற்கு ஒத்துப்போவது, அதனை ...