குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற ஐந்து மாதக் கர்பிணியை கற்பழித்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற 11 குற்றவாளிகளை 15 ஆண்டுகளில் விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு! ஆனால், தமிழக அரசுக்கோ ஏன் 20-30 ஆண்டு சிறைவாசிகளைக் கூட விடுதலை செய்ய முடிவதில்லையே ஏன்? 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறையில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர், அன்றைய மோடி தலைமையிலான குஜராத் ஆட்சியில்! குஜராத் கலவரத்தின் போது பல அதிர்ச்சி தரும் ஈவு இரக்கமற்ற படு ...

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தற்போது பரபரப்பாகவும், அரைகுறையாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது! ராகுல் காந்தியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை செய்து, அலைக்கழித்து வருகிறார்கள்! காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டக் களம் கண்டுள்ளனர்! உண்மையில் நடந்தது என்ன? மலையை கிள்ளி எலியை பிடித்த கதையாக விசாரணை 11 மணிகளை தாண்டியதும் , தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் விசாரணை தொடர்வதும் காங்கிரஸ் தலைவர்களை தடுப்புக் காவலில் கைது செய்வதும், போராடும் தொண்டர்களை அடித்துத்தள்ளி அநாகரீகமாக நடத்துவதையும் நாம் கண்ணுற்றோம் . அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா ...

‘இந்து விரோத திமுக ஆட்சி ஒழிக! பிராமண துவேஷ திமுக ஆட்சி ஒழிக!’ என அரசியல் ஆயுதத்தை பாஜகவினர் கையில் எடுத்தனர்! ஆனால், ‘அயோக்கியர்களின் பிடியில் அயோத்தியா மண்டபமா?’ என்பதாக ஜெயலலிதா ஆட்சியில் தான், இது, அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது! நீதிமன்றமும் ஏற்றது! இதன் பின்னணி என்ன? திமுக அரசுக்கு எதிராக சுமார் ஐம்பது பேர் கூடி அயோத்திய மண்டப வாயிலில் கத்தினார்கள்! பாஜக அண்ணாமலை ஆர்பரித்தார்! பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனோ, ”சென்னையிலேயே இந்த ஒரு பகுதியில் தான் வார்டு ...

கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா ...

ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரம் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாகவே பட்டாசுப் புகையில் சிக்கித் திணறியது. மேக மூட்டமும், விடாமல் பெய்த மழையும், குளிரும்,  முதியவர்களுக்கும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சற்று சிரமத்தை தந்தன! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழ்நாட்டில் 1614 வழக்குகளும் சென்னை மாநகரில் 758 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 517 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு கடை நடத்தியதற்காக 239 வணிகர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.  நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசுவெடியால் ...

சமரசமற்ற ஒரு நேர்மையான அதிகாரியால் எழுதப்பட்ட சமகால வரலாறு!  நேர்மையாக இயங்குவது எவ்வளவு கசப்பான அனுபவங்களைத் தரும், எதிரிகளை உருவாக்கும், நெருப்பாற்றில் நீந்த வைக்கும்… என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக விளக்குகிறார் நல்லம்ம நாயுடு. ஆனால், இவரது நேர்மையின் உறுதிப்பாடு இல்லாமல் ஜெயலலிதா சிறைச்சாலைக்கு சென்று இருக்க வாய்ப்பில்லை என அறியும் போது வியப்பாக உள்ளது..! காமராஜர் தொடங்கி ஜெயலலிதா வரையிலான ஆளுமைகளை சரியாக அடையாளப்படுத்துகிறார்! நேர்மை என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டியது. ஆனால் அப்படி இருக்கும் சிலரையும் அதில் இருந்து தடம் ...

பிடிக்காதவர்கள் மீது அவதூறு எழுதுவதும், பிடித்தவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் மூடிமறைத்து அலட்சியப்படுத்துவதும் தினமலரின் வாடிக்கை! கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்..போன்ற மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தி எழுதும். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை இழிவுபடுத்தி எழுதும். முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கும். காவல்துறை என்ன செய்தாலும் கண்ணை மூடி ஆதரிக்கும்! ஏத்தாபூர் வியாபாரி முருகேசன் போலீசால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் விஷிவலாக வெளியாகி அனைவரும் ...