யாரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லை! கிராமங்களில் விவசாயிகள் மத்தியில் இது எந்தச் சலனத்தையும் மேற்படுத்தவில்லை! மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பயிர்க் கடன் தள்ளுபடி என்ற அதிமுக அரசு எய்திய அஸ்த்திரத்தால் பலடைவது விவசாயிகளல்ல என்பது தான் இதிலுள்ள யதார்த்தம்! தரப்படுவதாகச் சொல்லப்படும் விவசாயக்கடன்களோ, அதன் தள்ளபடிகளோ விவசாயப் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பது மட்டுமல்ல, உண்மையில் கடன்களும், தள்ளுபடிகளுமே விவசாயிகளின் பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றன! முதல்வர் பழனிச்சாமி குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக பல வருடங்களாக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் கூட்டுறவு வங்கிகளை திவாலாக்குவது மாபெரும் அநீதியாகும்! 12,110 ...

முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது காந்தி நினைக்கப்பட வேண்டியவராகிறார். விவசாயிகளை – மக்களை – அடிமைப்படுத்தும் மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கேட்டு நடக்கும் இந்தப் போராட்டம் காந்தியைக் கொண்டாடும் ஒன்றாகும்! தில்லியின் எல்லையில் நடக்கும் போராட்டம் உலகம் கண்டிராத ஒன்றாக உள்ளது. இது எந்த ஒற்றைத் தலைமையின் கீழும் நடக்கவில்லை! போராட்டத்தில் சிறிதும் வன்முறை இல்லை. ஜன 26 ல் நடந்த வன்முறை – போராட்டத்தின் உறுதி கண்டு பயந்த அரசு செய்வதறியாது – போராட்டத்தை வன்முறையாளர்களின் போராட்டம் என்று  மக்களிடம் சித்தரிக்க ...

எது நடக்க வேண்டும் என்று இந்த அரசு காத்திருந்ததோ..,அது இன்று நடந்தேறிவிட்டது! தேசபக்தி என்பது குடியரசு தின நிகழ்ச்சிகளில் ஆடும் ஆட்டம்,பாட்டம், காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்திகளில் மட்டும் தான் வெளிப்பட வேண்டும் என்பதல்ல! ஆட்சியாளர்கள் மேற்பார்வையில் அவர்களுக்கு கட்டுப்பட்டு வெளிப்படுவதல்ல, தேசபக்தி! விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பு அரசாங்க அணிவகுப்பைவிட பிரம்மாண்டமானதாக – 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததையும் –  சுமார் 3000 தன்னார்வலர்கள் அதை ஒழுங்குபடுத்தி வந்ததையும் – அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை…! பெண்களும் டிராக்டர்களை ஓட்டி ...

உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானத்திற்கு அனுமதி! ஆனால், உடலுக்கு நன்மை செய்யும் பாரம்பரிய பானமான கள்ளுக்குத் தடையா…?  விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரும் கள்ளை தடை செய்துவிட்டு, அரசியலில் உள்ள மாபியாக்கள் கல்லா கட்டுவதற்காக டாஸ்மாக் மதுபானத்தை தமிழகத்தில் ஆறாக ஓடவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்…! என்று பொங்கி வெடித்தனர் விவசாயிகள்!  சென்னையில் இன்று (21.01.21) தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான  செ.நல்லசாமி தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் பார்த்தவர்களின் இதயத்தை ...

உறுதிமிக்க விவசாயிகள் போராட்டத்தை கண்டு அரண்டு போயுள்ள அரசு, உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் விவசாயிகள் போராட்டத்தை நசுக்க திட்டமிடுகிறது. அதன் விளைவே நான்கு பேர் கமிட்டி. இந்த நான்கு பேர் வேறு யாருமல்ல, இந்த சட்டங்கள் உருவாக்கத்தின் பின்னணியில் செயல்பட்டவகளே..! கொலைகாரர்கள் கையில் அதிகாரபூர்வமாக கத்தியை தந்ததைப் போல விவசாயிகள் அழிவுக்காக திட்டமிட்டவர்களிடமே தீர்வையும் கேட்டுப் பெறுகிறது உச்ச நீதிமன்றம்! எட்டாவது சுற்று பேச்சு வார்த்தை அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையே தோல்வி அடைந்த நிலையில் அடுத்த சுற்று பேச்சு வார்த்தை ஜனவரி 15 என்று அரசு ...

நானும் விவசாயி தான் என்று சீன் காட்டினால் சரியாகிடுமா? தமிழ் நாட்டில் விவசாயம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்துத்துக் கொண்டுள்ளது! தமிழக விவசாயத்தின் யதார்த்ததை அணுவளவும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி! ”விவசாய உற்பத்தி பொருள்களை வெளி நாட்டுக்கு அனுப்பி விவசாயிகள் லாபம் பார்க்க ஏற்பாடு பண்ணுவோம்’’ என்று பேசியுள்ளார்! கடந்த 13 ஆண்டுகளாக அரிசி விளைச்சல் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது! அண்டை மாநிலங்களுக்கெல்லாம் அன்ன தாதாவாக அரிசியை அனுப்பிக் கொண்டிருந்த தமிழகம் தற்போது தன் தேவைக்கே அண்டை மாநிலங்களை நம்பி ...

2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 96 லட்சம் உயிர்களை புற்று நோய் களவாடிச் சென்றுள்ளது! புற்று நோயை ஒப்பிடும் போது கொரானா எல்லாம் கால்தூசாகும்! இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ’கேன்சர்’ எனப்படும் புற்று நோய்க்கு ஆளானவர்கள் 13,92,179 பேர்! இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் புற்று நோய் தாக்கத்தால் எட்டு லட்சம் பேர் பிறக்கவுள்ள 2021 ஆம் ஆண்டை பார்க்க வாய்ப்பில்லாதவர்களாக சென்று சேர்ந்துவிட்டனர்! தமிழகத்தில் மட்டுமே இந்த ஆண்டு புற்று நோய்க்கு ஆளானவர்கள் 78,641. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை ...

நம்மிடையே வாழ்ந்த நவீன காந்தியாகத் தான் நான் அவரை உணர்ந்தேன்! சுய நலம் துறத்தல், வேறுபாடுகளின்றி அனைவரையும் அரவணைத்தல், இடையறாத மக்கள் சேவை, எளிமை, மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்த நேர்மை, போராடுவதில் காட்டிய நெஞ்சுரம், அன்பை பொழிவதில் வெளிப்படுத்திய தாய்மை குணம் என பன்முகத் தன்மை கொண்டவர் நம்மாழ்வார்! தான் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை தன் எண்ணங்களால், செயல்களால் உருவாக்கிச் சென்றவர் நம்மாழ்வார்! 1969 தொடங்கி அவர் களப் பணிகளுக்கு தன்னை ஒப்புவித்துக் கொண்டவர் என்றாலும், 1990 களில் சிறு விவசாயப் ...

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும்,; மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் மாநில அதிமுக அரசு மக்கள், விவசாயிகள் விரோதசட்டங்களை ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் விவசாயிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பொதுமக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும்  மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியிலே நடைப்பெரும்  “டெல்லிசலோ”(Delhi Chalo ) என்கின்ற விவசாயிகளின் மாபெரும் ...

விவசாயப் போராட்டத்திற்கான முழுமுதற் காரணிகள் அம்பானியும், அதானியும் தான்! அவர்களால் வடிவமைக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் தாம் பாராளுமன்றத்தில் அராஜகமாக பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது! அம்பானிக்கும், அதானிக்கும் சேவை செய்வதற்காகவே பாஜக அரசு தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது தான் என்றாலும், இந்த விவசாய திட்ட அமலாக்கத்தின் மூலம் அது சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுவிட்டது! அது தான் விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது, மாநில அரசாங்கங்களின் A.P.M.C என்ற விவசாய உற்பத்தி பொருட்களின் விலையை ...