நிகழ்காலம் போலவே எதிர்காலமும் முக்கியம். நிகழ்காலப் பிரச்சனைகளால் நாம் எதிர்காலத்தை சிந்திப்பதில்லை. இன்றைய வருமானம் எதிர்காலத்தில் சந்தேகமே. இன்றைய வருமானத்தைச் சரியாகக் கையாண்டால் எதிர்காலம் சிரமம் இல்லை. விபரமில்லாமல் பல மோசடித் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏகப்பட்டவர்கள் ஏமாறுவது ஒரு தொடர்கதையாகி வருகிறது என்பதால், அரசு சேமிப்பு திட்டங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறோம். அரசு திட்டங்களில் பயம் தேவை இல்லை! பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை! அரசாங்கம் நாட்டிற்கு ஐந்து ஆண்டு திட்டம் உருவாக்குகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டில் என்ன செய்ய ...

எப்படி சேமிப்பது? எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்து வளர்த்து எடுப்பது? என்பது தெரியாத காரணத்தாலேயே பல துன்பவியல் சம்பவங்கள்,தற்கொலைகள் நிகழ்கின்றன! உண்மையில் சேமிப்பு என்பதை அறியாமலே வாழ் நாள் முழுக்க கடனாளியாக வாழ்ந்து மடிபவர்களும் உண்டு..! நாம் சிக்கனம் செய்து சேமித்து வைத்திருக்கும்  பணத்தை என்ன செய்யலாம் என்றால், சீட்டுப் போடுங்கள் என்று நண்பர்கள், உறவினர்கள்  சொல்வார்கள். நாமும் நம் பகுதியில் சீட்டு பிடிப்பவர்களிடம் கட்ட தொடங்குவோம். இன்று நம் மக்களின் முக்கிய முதலீடு சீட்டுக் கட்டுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முறையாவது சீட்டுக் ...

பணத்தை சேமிப்பது ஒரு கலை! பண முதலீட்டில் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது அதைவிட பெரிய கலை! இங்கு நம் அரசாங்கம் பாதுகாப்பான சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் செய்துள்ள வாய்ப்புகள் என்னென்ன? அதைக் கடந்து நாம் என்ன செய்ய முடியும்.. ஒரு அலசல்! பணத்தை சேமிக்கத் தான் நாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆனால், முதலீடு செய்ய கஷ்டப்பட  வேண்டியதில்லை. இருந்தாலும், காலம் முழுவதும் உழைத்துக் கொண்டு இருக்கிறோமே தவிர, எளிதாகச் செய்யக் கூடிய முதலீட்டை 95 சதவிகிதம் மக்கள் செய்வதில்லை. பலரும் பணத்தைச் சேமித்தால் போதும் அவையே ...

பாஜக அரசு கிரிப்டோ கரன்ஸியை அங்கீகரித்ததில் இருந்து நாடு முழுவதும் இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன! பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக ஏமாறுகின்றனர்! கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்து, அபாரமான வட்டியாம்! காந்தப் படுக்கை, ஈமு கோழி மோசடிகள் வரிசையில் தற்போது கிரிப்டோ கரன்சி! நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில், சேமிப்பு கணக்கில்  வைத்தால் தற்பொழுது ஒரு லட்சம்  ரூபாய்க்கு மாதம் 550 ரூபாய் வட்டியாக வருகிறது. இது மிகக் குறைந்த தொகையாகத் தெரியும். வங்கி நம்மிடம்  இருந்து வாங்கிய பணத்தை 8 சதவிகிதத்திற்கு வீட்டுக் கடன், வாகன ...

விவசாய பட்ஜெட் பரவலாக மேம்போக்காக வரவேற்கப்பட்டுள்ளது! பொதுவாக நம் அரசுகளின் விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கும்,வேளாண்ச் சூழலுக்கும் எதிராகவே போடப் படுகின்றன! அடிப்படை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசியமற்ற அறிவிப்புகள் செய்கின்றன..! வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படுமாம். மகிழ்ச்சி! அதே சமயம் இயற்கை வேளாண்மை கொள்கை என்ற ஒன்றையே நீங்கள் இது வரை உருவாக்கவில்லையே! அதன் அவசியத்தை இன்னும் உணரவில்லையே! இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் ...

இப்படியும் நடக்க முடியுமா? என வியப்பின் உச்சமாக தேசிய பங்கு சந்தை ஊழல்கள் மிரட்டுகின்றன! சில லட்சம் கோடிகளில் நடந்துள்ள இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் ஏழாண்டுகளாக மறைக்கப்பட்டதன் மர்மம் என்ன? இப்போதும் அறைகுறையான விசாரணைகளுடன் அனுசரனை காட்டப்படுவது ஏன்? தேசிய பங்கு சதையில் மிகத் தெளிவாக திட்டமிட்டு பல லட்சம் கோடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன! நூதனமாக நவீன கம்யூட்டர் வழி இணைய சர்வர் மூலம் பல புரோக்கர்கள், நிறுவனங்கள் முறைகேடாக பல்லாயிரம் கோடிகளில் பணம் ஈட்டி பலன் அடைந்துள்ளனர்! பல்லாயிரக்கணக்கானோர் பணம் கட்டி ...

இப்படி எல்லாம் கூட நடக்குமா..? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாவின் மாபெரும் நிறுவனமான ஏர் இந்தியா விற்பனை நடந்துள்ளது. நஷ்டத்திற்கே வழியில்லாத லாபகரமான விமான சேவைத் தொழிலை அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமாக கூட்டுச் சேர்ந்து சீரழித்தது போதாது என்று இன்று கிட்டத்தட்ட அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு தந்துவிட்டனர்! கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இந்த விற்பனை குறித்து கொந்தளித்துள்ளார் “நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் சூறையாடி வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி ...

சம்பாதிக்க கற்றுக் கொள்வதற்குள் கடன் வாங்க கற்றுக் கொடுக்கும் வங்கிகள்! தனி நபர் கடன்கள்,கிரடிட் கார்டுகள், Lazypay.. இந்த வலைப் பின்னலுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் என்ன..? கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்கியவர்களின் கதி என்னவாகிறது..? இந்தியாவில் பெரும்பாலான மக்கள், அடி நிலை, நடுத்தர நிலை மக்களாகும். இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணத் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும்.  இவர்களிடம் வங்கிகளே நாங்கள் தனிநபர் கடன் கொடுக்கிறோம், அதற்கு எந்த வித அடமானமும் தேவை இல்லை. உங்கள் சம்பள விவரம், வங்கி ஸ்டேட்மென்ட் ...

அரசாங்க சொத்துக்களையெல்லாம் தங்கள் ஆத்மார்த்த நண்பர்களுக்கு அள்ளி எடுத்து தந்து கொண்டுள்ளது பாஜக அரசு. தேசீய பணமாக்கல் திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் கோடி பணம் -பொது சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு கொடுப்பதன் மூலம்-திரட்டப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததற்கு எதிராக இன்று தமிழக சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒன்றிய அரசின் சமூக விரோத செயல்பாடுகளை யார் தடுப்பது,எப்படி எதிர்ப்பது என இந்தியாவே திகைத்து நிற்கையில். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ...

தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் அரசின் வசமுள்ள சொத்துகள், மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு  குத்தகைக்கு தரப் போகிறார்களாம்! இந்தியாவின் சமானிய குடிமக்களுக்கு உயர்தரத்தில் அணுகக்கூடிய வகையில் உள் கட்டமைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், ,சுரங்கம், எரிவாயுக் குழாய் உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு ...