ஆண்மைக் குறை பிரச்சினையால நிறையபேர் அவதிப்படுறாங்க. பொதுவா பெண்மை, தாய்மை பற்றி பேசுற நாம ஆண்மை பற்றி பெருசா பேசுறதில்லை. ஆண்மைனா என்ன?  ஆண்மைக்கு அளவுகோல் உண்டா? இதற்காக மருந்து, மாத்திரை, லேகியம், சூரணம் என்று அலைபாய்வது தேவையற்றது. ஆண்மை இல்லாத ஒரு மனுசனை இந்தச் சமூகம் எப்படி பார்க்குது? ஒரு ஆண்மகனால குழந்தை பெத்துத்தர முடியலன்னா அவனை எப்படி பார்ப்பாங்க? பெண்கள்கிட்ட தாய்மையை எதிர்பார்க்கிற மாதிரி ஆணிடம் ஆண்மை இருக்கான்னு எதிர்பார்க்கிறதுல என்ன தவறு? ஆண்மைல ஏற்படக்கூடிய குறைபாட்டுக்கு என்ன காரணம்னு நிறையவே ...

‘ஒரு பெண் தன்னார்வத்துடன் கொள்ளும் பாலியல் உறவு குற்றமாகாது, சட்டத்திற்கு புறம்பாகாது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கண்ணியக் குறைவாக யாரும் நடத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! மிக நுட்பமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய இந்த தீர்ப்பு குறித்து சில பெண் ஆளுமைகளின் கருத்து! ”என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இது தான் ஐயா பொன்னகரம்” என்று ஒரு புகழ்பெற்ற கதை முத்தாய்ப்பாக முடியும். அடிபட்டு கிடக்கும் தன் கணவனுக்கு பால், கஞ்சி வாங்குவதற்காக, அம்மாளு இருளில் ஒதுங்கி முக்கால் ...

மருத்துவ வல்லுநர் குழுவின் எதிர்ப்பை பொருட்படுத்தால், மூர்க்கதனமாக குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன? மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்தை சிறார்களுக்கு கைவிடக் கூறி, மக்கள் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை! கடந்த  மூன்று அலைகளிலும் கொரானா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- சிறார்களின் சதவீதம் 0.02 தான். இந்தத் தொற்று நோய் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை  பாதிக்காது என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் சொன்ன பிறகும் “தடுப்பு மருந்து, தடுப்பு மருந்து “என்று இவர்கள் ஏன் அலைய ...

காங்கிரஸ்  பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அறிந்தோ அறியாமலோ, இந்துத்துவா சர்வாதிகாரம் வளர்வதற்கு நேரு குடும்பத்தினர் எல்லா வாய்ப்புகளும் கொடுக்கின்றனரோ..?  2024 ல் மீண்டும்  படு மோசமான பாஜக ஆட்சி தொடரும் என்றால், நேரு குடும்பத்தை நம்பிக் கொண்டு, இந்த ஆபத்தை அனுமதிக்க போகிறோமா? எட்டு ஆண்டுகால  மோடி அரசை பாராபட்சமின்றி மதிப்பிட்டு பார்த்தோமேயானால், இந்த அரசின் சாதனை மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்த அரசு வளர்ச்சி விகிதங்களில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்பே இது வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும், வேலையின்மை ...

இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் திறன் உள்ள சிறார்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் அறவே இல்லை. வலிந்து தடுப்பூசியை திணிப்பது நீண்டகால நோக்கில் பல பாதகமான விளைவுகளை தரும் என சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் எதிர்க்கிறார்கள்! அதையும் மீறி ஏன் இந்த திணிப்பு? கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தும் தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் ...

இந்த தீர்மானத்தையும் கவர்னர் கிடப்பில் போடலாம். சட்ட மன்றத்திற்குள் நீட் எதிர்ப்புக்கு நின்ற அதிமுக நாளை பாஜக நிர்பந்தத்தால் காலை வாரலாம்! ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? ஒரு விஷயம் தெளிவாகச் சொல்ல முடியும், தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் நீட் எதிர்ப்பில் ஒருமித்த கருத்தில் உள்ளன! ஆக, நீட் வேண்டுமா? வேண்டாமா? என்ற தடுமாற்றம் தமிழகத்தில் பெரும்பான்மையோருக்கு இல்லை எனலாம்! ஆனால், நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு மட்டும் இந்தியாவில் தனிமைப்பட்டு நிற்கிறது என்பது உள்ளபடியே நமக்கு பின்னடைவு தான்! நீட்டை ...

‘புர்கா அணிந்த மாணவிகளை இனி கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்’ என கர்நாடகாவில் ஒரு புதிய கலகத்தை தூண்டியுள்ளது பாஜக! மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருப்பது இந்திய அளவில் பெரும் விவாதமாகியுள்ளது. இது குறித்து இதுவரை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் என்னென்ன? கர்நாடகாவில் பள்ளியின் 12ஆம் வகுப்புக்கு இணையான பாடமுறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இஸ்லாமிய மாணவிகள், புர்காவை அகற்றிய பிறகு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாவட்ட உதவி ஆணையர் அந்தஸ்துள்ள அரசு அதிகாரிகள் குழு ஆணையிட்டுள்ளது. ஆனால், மாணவிகள் அதை ஏற்க ...

சமீபத்தில் தமிழக சுகாதாரத் துறையின் ஒரு சுற்றறிக்கை மக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதை கேள்விக்கு உள்ளாக்குவதாக – கட்டுப்படுத்தும் தோரணையில் – உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் நலன் சார்ந்து முடிவெடுத்து உயிர் வாழும் உரிமை உள்ளது!  தடுப்பூசியை திணிக்கக் கூடாது என நீதி மன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன!அதை உறுதிபடுத்துவதே அரசாங்கத்தின் கடமை! அதை மீறுவதாக அந்த சுற்றறிக்கை இருந்ததையடுத்து அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் மருத்துவர் பிரேமா! மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். தடுப்பூசி செலுத்தியவர்கள் ...

வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதாக மோடி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், அது தன் தவறுகளை உணர்ந்தோ, மனம் மாறியோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைக் கருதியோ அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என எவருமே உணரலாம்! அந்த அறிக்கை இப்படிச் சொல்கிறது; நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே ...

எல்லோரையும் சட்டம் போட்டு முடக்கிவிடறாங்க..ஆனா, கொரோனாவை முடக்க வழி தெரியல! தீர்வு என்ன என்று தெரியாமல் குருட்டாம் போக்கில் ஏதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து செய்யப்படுவது தான் ஊரடங்கு! ‘’இதுவும் தீர்வாகுமா பார்ப்போமே..’’ என்ற நம்பிக்கையே தடுப்பூசி..! மொத்ததில் சிக்கலை அதிகப்படுத்துகிறோம்! தீர்வை கண்டடைய முடியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சக்திக்கு மீறி வேலை பார்த்து சோர்வுற்ற வண்ணம் உள்ளனர்! புதிதாக பொறுப்பேற்ற அரசாங்க தலைமையும் சரி, அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் சரி பம்பரமாக சுற்றிச் சுழன்று ...