ஜெயலலிதா இறப்பு இன்னும் மர்மமாகவே தொடர்கிறது! மக்களுக்கு முதலில் அப்பல்லோ மீதும், சசிகலா மீதும் தான் அதிக கோபம் இருந்தது. ஆனால், தற்போது ஒ.பி.எஸ்சின் மீதும் அந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. எத்தனையெத்தனை மழுப்பல்கள், முரண்கள்! 50 கோடி செலவில் ஐந்தாண்டு விசாரணை எல்லாம் வீணா? ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து மூன்றே மாதத்தில் அல்லது அதிகபட்சம் ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்றார்கள் ஓ.பி.எஸ்சும்,இ.பி.எஸ்சும்!  உச்ச நீதிமன்றத்தில் ...

எஸ்.கண்ணப்பன், சேத்தியாதோப்பு, கடலூர். கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முதல்வர் முன்னிலையில் உள்ளார் என கூட்டணிக் கட்சிகள் புகழ்ந்து தள்ளுகிறார்களே? கூட்டணிக்கு மட்டும் தான் தர்மம் உள்ளதா? உள்ளாட்சியில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு தங்கள் ஊருக்கான தலைவரை தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை பறிப்பது தர்மமா? மேலிடத்து அதிகாரத்தின் மூலம் உள்ளாட்சிகளில் செல்வாக்கில்லாத இடங்களில் தங்கள் கட்சிக்கான தலைமையை வலிந்து திணிக்கும் கூட்டணித் தலைவர்களுக்கு தர்மத்தின் பொருள் தெரியுமா? எளிய கட்சிக்காரனின் உரிமையை பறிப்பது தர்மமா? அ.அறிவழகன், மயிலாடுதுறை நீட் தேர்வால் தான் வெளிநாடுகளுக்கு மாணவர்கள் படிக்க ...

தோல்விக்கான மனம் திறந்த சுய பரிசீலனைக்கு அதிமுகவில் யாரும் தயாரில்லை! அதிகார அரசியலில் முந்துகிறார் இ.பி.எஸ்! தற்காப்பு அரசியலுக்கான சண்டையில், சசிகலாவை கேடயமாக்குகிறார் ஒ.பி.எஸ். அந்தக் கேடயம் அவரை காப்பாற்றுமா? இல்லை, கதறடிக்குமா? ஒட்டுமொத்த கட்சியும் பொதுக் குழு கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு விலக்கியது! சசிகலாவை எதிர்த்து 90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா சேர்க்கை என பேச்செடுத்தாலே கட்சிக்குள் எத்தகையை கொந்தளிப்பையும், கோபத்தையும் சந்திக்க நேரும் என்று கூட ஒ.பி.எஸுக்கு நன்றாகத் தெரியும். ஆனபோதிலும், தேனி மாவட்ட நிர்வாகிகளை ...

வேல்முருகன், சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம் நாகலாந்து சம்பவத்தில் அமித்ஷாவின் விளக்கத்தை கேட்டீர்களா? அப்பாவிகள் சென்ற வாகனத்தை தவறுதலாக புரிந்து கொண்டு இராணுவத்தினர் ஆறு பேரைக் கொன்றுவிட்டனர். அதில் கோபமடைந்த கிராமத்தினர் வேன்களுக்கு தீ வைத்துள்ளனர்! இதனால் அவர்களையும் சேர்த்துக் கொன்றுள்ளனர். மாநில போலீசாரை துணைக்கு வைத்துக் கொண்டிருந்தாலே இந்த சம்பவம் தவிர்க்கப் பட்டு இருக்கும்! மாநில அரசு நிர்வாகத்தின் துணையோடு ரோந்து சுற்றி இருந்தால், உயிர்ப்பலிக்கே வாய்ப்பில்லை என உள்ளுர் காவலர்கள் வருந்துகின்றனர். உள்துறை அமைச்சருக்கு இதில் குற்ற உணர்வு கூட இல்லை என்பது தான் ...

பித்தலாட்டத்தின் உச்சமாக நடந்து முடிந்துள்ளது அதிமுக தலைமைக்கான தேர்தல்! தேர்தல் கமிஷன், சொந்த கட்சியினரை மட்டுமல்ல, சகலரையும் முட்டாளாக்கி உள்ளது இந்த தேர்தல்! சசிகலாவை தன் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்கான பகடைக் காயாக்கிக் கொண்டுள்ளார் பன்னீர்! சில நிர்வாகிகள், ‘கட்சியில் தங்களுக்கு செல்வாக்கு உள்ளது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுகிறோம்’ என்றும் வேட்பு மனு அளித்திருந்தனர். அதன்படி முதல் நாளான 3-ந் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ந் தேதி 98 மனுக்கள் வந்தது. இன்னும் சிலரையோ மனுப் போடவே அனுமதிக்கவில்லை! ...

இரா.அன்பழகன், திருப்பரங்குன்றம், மதுரை அதிமுகவில் பிளவு ஏற்படுமா? பிளவு ஏற்பட்டால் யார் கை ஓங்கும்? கட்சி நடத்திச் செல்லும் அளவுக்கு கமிட்மெண்ட் உள்ளவரல்ல ஒபி.எஸ். தொண்டர்கள் ஆதரவுமில்லாதவர். சசிகலாவை நம்பி சென்றால் காலப்போக்கில் காணாமலாக்கிவிடுவார்கள்! கமிட்மெண்ட்டானவர் என்றாலும் தலைவனுக்கான பண்பில்லாதவர் இபிஎஸ்! சசிகலாவும், தினகரனும் தங்கள் சமுதாயம் அளவுக்கு மட்டுமே செல்வாக்குள்ளவர்கள்! ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் சூட்சும அரசியலில் யார் தப்ப முடியும் எனத் தெரியவில்லை! பிளவு தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது. பிளவுக்குப் பின் அந்தக் கட்சி நீண்ட நாட்களுக்கு பிழைத்திருக்காது. எஸ்.ராதாகிருஷ்ணன், தேன்கனிக் கோட்டை, ...

ராஜமார்த்தாண்டன், புதுவண்ணாரப் பேட்டை, சென்னை அதிமுக அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் அறச்சீற்றமா? கண் துடைப்பா? 1996 திமுக ஆட்சியில்ரெய்டுக்குள்ளான முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் ரெய்டு முடிந்த கையோடு கைது செய்யப்பட்டனர்!  அதிமுக ஆட்சியில் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி போன்ற அமைச்சர்களை கைது செய்து சிறையில் தள்ளினார் ஜெயலலிதா! தற்போது ரெய்டுக்கு முன்னும், பின்னும் தெனாவட்டாக பேசி வருகின்றனர் அதிமுக மாஜிக்கள்! முடிவை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன். தா. மணிகண்டன், ராஜபாளையம், விருதுநகர் சசிகலாவுக்கு சிறைக்கு சென்ற பொழுது இருந்த தைரியம் கூட இப்பொழுது ...

ஏ.செந்தில், மதுரை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல்வாதிகள் புதிய கட்சிகள் தொடங்கத் தான் இந்த ஜனநாயகம் பயன்படுகிறதே தவிர, சாமானிய மக்களுக்கு என்ன பயன்? சாமானிய மக்களையும் அரசியல்வாதிகள் ஆக்கிக் கொண்டுள்ளது நம் ஜனநாயகம். பணமில்லாமல் தேர்தல் களத்திற்கு வராதே என்று இன்று மக்கள் அரசியல்வாதிகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்…! முகைதீன் புதல்வன், இராமேஷ்வரம், இராமநாதபுரம் கேள்வி கேட்பவர்கள் அறிவாளிகளா? பதில் சொல்பவர்கள் அறிவாளிகளா? முட்டாள்தனமான கேள்விகளை எதிர்கொள்ளத் தெரிந்த அறிவாளிகளும் உண்டு. அறிவாளிகளைக் கூட முட்டாள்கள் ஆக்கிவிடும் கேள்வியாளர்களும் உண்டு. ...

சசிகலாவை பற்றி கேட்டால் எடப்பாடி எஸ்கேப்..! என்ன நடந்தது..? பன்னீர் முதலில் டெல்லி கிளம்ப, அடுத்த நாள் எடப்பாடி தன் சகாக்களுடன் விழுந்தடித்து பின் தொடர என டெல்லியில் இருவருமாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். 25 நிமிட சந்திப்பு இனிதாக இல்லை போலும்! வெளியில் வந்து நிருபர்களிடம் பேட்டியளித்த எடப்பாடியின் முகம் வெளிறி இருந்தது. குரலில் சொரத்தே இல்லை. ஏதோ தமிழ் நாட்டு நலன் தொடர்பாக விவாதித்தது போல ஏகப்பட்ட கற்பனை உரையாடல்களை சொன்னார். பக்கத்தில் இருந்த பன்னீர் செல்வத்தை பேசவே அனுமதிக்கவில்லை. சசிகலாவை ...

சசிகலாவே அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் ஊடகங்களுக்கு சசிகலா வேண்டும். ஊடகங்களின் செய்திப் பசிக்கு தர்ம நியாயங்களே கிடையாது! இன்றைக்கு எவ்வளவு பார்வையாளர்கள் கிடைத்தார்கள் என்பது காட்சி ஊடகங்களுக்கும், எவ்வளவு பத்திரிகை கூடுதலாக வாங்கப்பட்டன என்பது அச்சு ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய இலக்காக உள்ளன! அந்த அடிப்படையில் தான் அனைத்தையும் அணுகுகிறார்கள்! இந்த நோக்கங்களே அவர்களை வழி நடத்துகின்றன! தந்தி டிவியில் என்னென்ன கேள்விகள் மக்கள் சார்பாக சசிகலாவிடம் வைக்கப்பட்டிருக்க வேண்டுமோ அவை எதுவுமே கேட்கப்படவில்லை. சசிகலாவிடம் பேச கிடைத்த வாய்ப்புக்காகவே அவர்கள் புளகாங்கிதம் ...